Monday, May 6

அன்றுனை ஈன்றவள்!

Apr` 25

அன்றுனை ஈன்றவள் 
மா தவம் புரிந்திருக்க 
வேண்டும்,
மாவிலை கொழுந்தின் 
வாசம் வீசும் சோலைதனில்
நீயும் பிறந்திருக்க வேண்டும்,
மாநிறம் மிகுந்து,
மாதுளை கலந்து,
பிணைந்து செய்தார்ப்போல்
உன்னிநிறம் மின்னுவதால்,

ஒருப்புறம் பார்த்தால்
சந்திரன் ஒளியும் நீ,
மறுப்புறம் பார்த்தால்
ஞாயிறின் கதிரொளி,
எதிரினில் நின்றால்
இயற்கையின் பிம்பம் நீ
தொலைவினில் வந்தால் - தேடிடும்
பெண்களின் மனக் கள்வன் நீ...

இதயமும் உன்னிடம்
எத்தனை தான் உள்ளதடா
ஏணியும் உன்னிடத்தில்
எத்தனைமுறை தோற்க்குமடா,
ஏக்கமாய் பார்க்கிறோம்
உன் உள்ளம் தனில் செல்லவே,
தருவாயா ஓர் இதயம்
உறவாய், தோழனாய், சகோதரனாய்
உன்னை கொள்ள.

அன்றுனை ஈன்றவள்
மா தவம் புரிந்திருக்க
வேண்டும்,
அன்றுனை ஈன்றவள்
மா தவம் புரிந்திருக்க
வேண்டும்,


எழுத்தோலை!

No comments: