Monday, May 6

கலை கண்களுக்கு மட்டும்!

Apr` 30

(கலை கண்களுக்கு மட்டும்)
---------------------------------------------

பின்னிருக்கை இல்லா 
ஈருருளை வேண்டும் - அதில் 
நாம் இருவர் மட்டும் 
பயணிக்க வேண்டும்,

முன் அனுபவமில்லா 
முத்தங்கள் வேண்டும் - அதில்
மூச்சோடு மூச்சாக
நாம் கலக்க வேண்டும்,

மடி மீது தலை சாய்த்து
முத்தங்கள் தந்தாலும் - அதில்
சத்தங்கள் கேட்காமல்
மூழ்கிட வேண்டும்,

இலைகளும் இல்லாத
செடிகளும் வேண்டும் - அதில்
கொடிப் போல் படர்ந்து
நாம் கிடக்க வேண்டும்,

மின்சாரம் இல்லாத
இரவுகள் வேண்டும் - அதில்
ஆடைகளும் வேலையின்றி
ஓய்வெடுக்க வேண்டும்,

அதிகாலை அரைத்தூக்கம்
அரவணைத்தாலும் க்கூட - அதில்
அவசரம் இல்லாத
சரசங்கள் வேண்டும்,

கனவொன்று கண்டாலும்
காமம் சேர்க்க வேண்டும் - அதில்
கனவென்பதே தெரியாமல்
கட்டில் உடைய வேண்டும்,

கண்ட நாள் முதல்
காதல் சொல்லா நின்றாலும் - அதில்
காத்திருத்தலும், பார்த்திருத்தலும்
சரிப் பாதி வேண்டும்,

வேண்டும் வேண்டும்
இவை எல்லாம் வேண்டும்,
வேண்டிக்கொண்டிருக்கிறேன்,
நீயும் - என்னைப் போல்
வேண்டியதுண்டா - சொல்லடி
என் மடிக் கணினியே.


எழுத்தோலை!

No comments: