Monday, May 6

எட்டிப் பார்த்தாலே போதுமே!


நித்தமும் சுற்றி வரும் நிலவும்,
ஒர்நாளே ஓய்வெடுத்து உறங்கும்,
அழகே, நீயும் நிலவில்லையா,
எத்தனைநாள் உன்னை தேடுவது,

பித்தனைப்போல் நானும் ஆனேனே,
முழுதாய் ஒளிவீச வேண்டாமே,
ஒளிந்து, எட்டிப் பார்த்தாலே போதுமே,
சிலகாலம் வாழ்ந்திடுவேன் நானுமே.

எழுத்தோலை!

No comments: